என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மஞ்சூரில் சாலையில் சுற்றி திரிந்த காட்டுமாடு- பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை, கரடி, காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகிறது. 10, 20 என கூட்டமாக காணப்படும் காட்டு மாடுகள் பெரும்பாலும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் தேயிலை தோட்டப்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டுமாடுகள் வீட்டு தோட்டங்களில் பயிரிடப் பட்டுள்ள காய்கறி செடிகளை தின்று தோட்டங்களையும் நாசமாக்குகிறது.
இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர் கரியமலை பிரிவில் அய்யப்பன் கோவில் அருகே குழந்தைகள், பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் அரசு பஸ்களுக்காக காத்திருந்தனர்.
அப்போது ராட்சத காட்டுமாடு ஒன்று நடுரோட்டில் கம்பீரமாக நடந்து வந்தது. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருநததால் ஓரமாக நின்றிருந்த மக்களுக்கு காட்டுமாடு வருவது முதலில் தெரியவில்லை. அருகில் வந்ததும் அதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்து அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
மேலும் அவ்வழியாக சென்ற வாகனங்களும் எதிரே ராட்சத காட்டுமாடு வருவதை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. இதை எதையும் பொருட்படுத்தமால் சாவகாசமாக நடந்து சென்ற காட்டுமாடு சாலையோரத்தில் இருந்த வேலியை உடைத்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்