search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வண்டலூர் ஏரிக்கரை அருகே கார் மோதி ஒருவர் பலி

    வண்டலூர் ஏரிக்கரை அருகே கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஏரிக்கரை அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×