search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெருநிலா கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 48). இவர் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×