search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருக்கடையூரில் கார் மோதி முதியவர் பலி

    திருக்கடையூரில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கடையூர்:

    கள்ளக்குறிச்சி செட்டி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). இவர் தனது உறவினர் 60-ம் கல்யாணத்திற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது இவர் திருக்கடையூர் மெயின் ரோட்டை கடந்தபோது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த கார், கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×