என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோழி இறைச்சியில் விஷம் கலந்து 7 நாய்களை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்22 Oct 2021 5:09 AM GMT (Updated: 22 Oct 2021 5:09 AM GMT)
கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களை கொன்றதாக ஆட்டோ டிரைவர் சுந்தரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் பகுதியில் உள்ள சுதந்திர பொன்விழா நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது.
200-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்தன. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்துக்கொண்டும் இருந்தன.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்தபோதும் 7 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அப்பகுதி மக்கள் இதுகுறித்து கோரிமேடு போலீசார் மற்றும் விலங்குகள் நல அமைப்பினருக்கும், தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அருகில் வசிக்கும் சிலர் நாய்களை கொல்லும் நோக்கிலேயே கோழி இறைச்சியில் செடிகளுக்கு பயன்படுத்தும் விஷத்தை (பூச்சிகொல்லி மருந்து) கலந்து கொன்றது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த நாய்களை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் விஷம் வைத்து நாய்களை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய 3 வயது ஆண் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.
இந்த ஆத்திரத்தில் கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களை கொன்றதாக சுந்தர் தெரிவித்தார். இதையடுத்து சுந்தரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை காமராஜர் நகர் பகுதியில் உள்ள சுதந்திர பொன்விழா நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது.
200-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்தன. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்துக்கொண்டும் இருந்தன.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்தபோதும் 7 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அப்பகுதி மக்கள் இதுகுறித்து கோரிமேடு போலீசார் மற்றும் விலங்குகள் நல அமைப்பினருக்கும், தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அருகில் வசிக்கும் சிலர் நாய்களை கொல்லும் நோக்கிலேயே கோழி இறைச்சியில் செடிகளுக்கு பயன்படுத்தும் விஷத்தை (பூச்சிகொல்லி மருந்து) கலந்து கொன்றது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த நாய்களை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் விஷம் வைத்து நாய்களை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய 3 வயது ஆண் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.
இந்த ஆத்திரத்தில் கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களை கொன்றதாக சுந்தர் தெரிவித்தார். இதையடுத்து சுந்தரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X