என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீர்காழி வட்டாரத்தில் மீண்டும் 3½ மணிநேரம் மின்வெட்டு- பொதுமக்கள் அவதி
சீர்காழி:
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.நேரம் செல்ல,செல்ல மின்சாரம் வரவில்லை. இரவு சுமார் 8.30மணி அளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. சுமார் மூன்றரை மணிநேரம் ஏற்பட்ட இந்த மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள்,மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சீர்காழி பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டநிலையில் மீண்டும் இவ்வாறு மின்வெட்டு ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டதால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.
மின்பராமரிப்பு பணிகளின்போது பழுது ஏற்பட்டுள்ள மின்கம்பி, மின்சாதனபொருட்களை மின்சார வாரியம் முறையாக சீரமைத்திருந்தால் இதுபோன்ற மின்வெட்டு பிரச்சனைகள் ஏற்படாது என வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து மின்சார வாரியத்திடம் கேட்டபோது, கிராரங்கொண்டான் மின்நிலையத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்திற்கு வரும் பிரதான மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்