என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த அதிரடிப்படை போலீசார் குவிப்பு
Byமாலை மலர்18 Oct 2021 9:43 AM GMT (Updated: 18 Oct 2021 9:43 AM GMT)
விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு சொந்தமான இலுப்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள லாட்ஜ், இலுப்பூர் சவுராஷ் டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் மகன் இளவரசனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் டாக்டர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வினர் என இன்று காலையிலேயே ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் அந்த பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு சொந்தமான இலுப்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள லாட்ஜ், இலுப்பூர் சவுராஷ் டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் மகன் இளவரசனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் டாக்டர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வினர் என இன்று காலையிலேயே ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் அந்த பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X