search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன்
    X
    பேரறிவாளன்

    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

    வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பேரறிவாளனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (வயது 49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவரது தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.

    அதன்பேரில், கடந்த மே மாதம் 28-ந்தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, பரோலை நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அதன்பேரில், தொடர்ந்து 5-வது முறையாக பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டது. அவர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்து வருகிறார்.

    இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    பேரறிவாளன் மூட்டு வலி மற்றும் சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக இன்று காலை ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து மூட்டுவலி மற்றும் சிறுநீரக பிரச்சினை தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    Next Story
    ×