search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் கைது
    X
    பெண்கள் கைது

    100 நாள் வேலை திட்ட பணியின்போது மோதல் - 2 பெண்கள் கைது

    வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்ட பணியின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் வேட்டைக் காரனிருப்பு மாரியம்மன் கோவில் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

    இதில் 2 பெண்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதால் நாச்சியன்காடு சத்யா (வயது 35) என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கலாராணி (42), அலமேலுமங்கை (41) ஆகிய இருவரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த சத்யா நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி வழக்கு பதிவு செய்து கலாராணியையும், அலமேலுமங்கையையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்துள்ளனர்.

    Next Story
    ×