என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடும்பம் நடத்த வர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து - கணவர் ஆத்திரம்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 23). இவர்களுக்கும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பாண்டீஸ்வரி, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ராஜூ என்ற அங்கால் ராஜூவை திருமணம் செய்தார். பின்னர் இருவரும் கோயமுத்தூர் சென்று வசித்து வந்தனர்.
ஆனால் கடந்த 2 வாரத்திற்கு முன்பு ராஜூவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாண்டீஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த சூழலில் திருத்தங்கல் வந்த ராஜூ, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பாண்டீஸ்வரி அதற்கு மறுத்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் என்றும் ராஜூ கூறிச்சென்றார்.
அதன்படி பாண்டீஸ்வரி தனது தந்தை அங்குச்சாமியுடன் போலீஸ் நிலையம் சென்றார். ஆனால் அங்கு புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு பாண்டீஸ்வரி, அங்குச்சாமி வீட்டுக்கு திரும்பி வந்தபோது ராஜூ வழிமறித்து வாக்குவாதம் செய்தார். ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டீஸ்வரி கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்