என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு- போலீசில் புகார்
Byமாலை மலர்12 Oct 2021 10:18 AM GMT (Updated: 12 Oct 2021 10:18 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூரைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் பிரேமா. இவருக்கும், தேனியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஜெயப்பிரியா என்ற மகள் இருந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா அவரை பிரிந்து தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு ஜெயப்பிரியா அருகில் உள்ள கோவிலில் கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மறுநாள் காலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பதறிபோன தாய் மற்றும் உறவினர்கள் சிறுமியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெயப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அவரது தந்தை சுகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. விழுப்பனூர் வந்த அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அப்போது அவர், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூரைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் பிரேமா. இவருக்கும், தேனியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஜெயப்பிரியா என்ற மகள் இருந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா அவரை பிரிந்து தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு ஜெயப்பிரியா அருகில் உள்ள கோவிலில் கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மறுநாள் காலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பதறிபோன தாய் மற்றும் உறவினர்கள் சிறுமியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெயப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அவரது தந்தை சுகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. விழுப்பனூர் வந்த அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அப்போது அவர், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X