search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுண்டர்
    X
    துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுண்டர்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுண்டர்

    ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர் :

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 54). இவர் நேற்று பென்னலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற போது, 3 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.
     
    இதனால் அச்சத்தில் இந்திரா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினான். பின்னர் வழிப்பறி கொள்ளையர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர்.

    காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடினர். கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் தனிப்படை போலீசார் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஏரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக வந்த நிலையில் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டான். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×