என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்ற 14 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது, மொத்தமாக விற்பனை செய்தது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாரியங்காவல் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் பாலமுருகன் விற்பனையாளர் சிவகுமார், வரதராஜன்பேட்டை டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர் செல்வகுமார், ரவீந்திரன், பழனிவேல், ஆகியோர் அனைவரும் மொத்த விற்பனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆண்டிமடம் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் பழனிவேல், மற்றும் விற்பனையாளர்கள் சண்முகவேல், பிறை செல்வன் ஆகியோர்ரொக்க பணம் கூடுதலாக இருந்ததாலும் அரியலூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ராஜகோபால் மற்றும் சாமிநாதன் விற்பனையாளர்கள் கருணாநிதி, அக்பர்கான், பாலசுப்பிரமணியன், ஆகியோர் தொகை குறைவுஇருந்தது போன்ற குற்றச்செயல்களுக்காக டாஸ்மாக் ஒழுங்குமுறை மோசடி நடவடிக்கைகள் தடுத்தல் மற்றும் கண்டுபிடித்ததற்காக விதிமுறைகளின்படி டாஸ்மாக் ஊழியர்கள் 14 பேரையும் சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்