என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஓசூர் அருகே தொழிற்சாலையில் விபத்து - தொழிலாளி பலி
ஓசூர் அருகே தொழிற்சாலையில் நடந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திகிரி:
ஓசூர் - தளி சாலையில் கலுகொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து அதை உருக்கி இரும்பு கம்பிகளை தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்த பணியில் பீகார் மாநிலம் சுனில் படேல் (வயது 30), சலாவுதீன் (24), ஜாகீர் ஹஜாம் (24), மத்திய பிரதேச மாநிலம் தேவேந்தர் சிங் (30) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் ஜிதேந்தர் குமார் லோதி (20) என்பவர், கிரேனை இயக்கி கொண்டிருந்தார். பழைய இரும்பு பொருட்களை உருக்கும் டேங்கில் பழைய இரும்பு பொருட்களை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இரும்புகளை உருக்கும் எந்திரத்தில் இருந்து இரும்பு துகள்கள் ஜிதேந்தர் குமார் லோதி மற்றும் அருகில் பணியில் இருந்த சுனில் படேல், சலாவுதீன், ஜாகீர் ஹஜாம், தேவேந்தர் சிங் ஆகியோர் மீது பட்டது. 5 பேரும் படுகாயம் அடைந்து அலறி துடித்தனர்.அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜிதேந்தர் குமார் லோதி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






