என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்10 Oct 2021 8:08 AM GMT (Updated: 10 Oct 2021 8:08 AM GMT)
வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி பார்வதி (வயது 60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனது மகள் கயல்விழி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய பார்வதி வீட்டு கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X