search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி பிரிந்து சென்றதால் சலூன் கடைக்காரர் தற்கொலை

    மனைவி பிரிந்து சென்றதால் சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள கங்கியம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி கண்மணி (28). இவர்களுக்கு பரணி என்ற மகன் இருந்தார். மகேந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கண்மணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக மகேந்திரன் தனியாக வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மின்விசிறி மாட்டும் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மகேந்திரன் இறந்தார்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×