என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெம்பாக்கம் அருகே குடிசை வீட்டில் தீப்பிடித்து ரூ.2 லட்சம் எரிந்து சேதம்
Byமாலை மலர்8 Oct 2021 11:31 AM GMT (Updated: 8 Oct 2021 11:31 AM GMT)
வெம்பாக்கம் அருகே குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது47). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு தமிழ் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் ராஜேஸ்வரி தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கம் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் அணைக்க முடியவில்லை. செய்யாறு தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. குடிசை வீட்டிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் பசுமை வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய ரூ.2 லட்சம், 5 சவரன் நகை உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து மனோகரன் கொடுத்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது47). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு தமிழ் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் ராஜேஸ்வரி தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கம் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் அணைக்க முடியவில்லை. செய்யாறு தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. குடிசை வீட்டிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் பசுமை வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய ரூ.2 லட்சம், 5 சவரன் நகை உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து மனோகரன் கொடுத்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X