என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகூர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்8 Oct 2021 11:03 AM GMT (Updated: 8 Oct 2021 11:03 AM GMT)
பாகூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே கீழ் பரிக்கல்பட்டு புளியஞ்சாலை தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆனந்தனுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இதையடுத்து மது பழக்கத்தை மறப்பதற்காக கற்பகம் தனது கணவரை தனது சொந்த ஊரான பண்ருட்டிக்கு அழைத்து சென்று கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது ஆனந்தன் தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அப்போது ஆனந்தன் மது குடிப்பதற்காக ஓரிரு நாள் அங்கேயே தங்கிவிட்டு அதன் பிறகு பண்ருட்டிக்கு செல்வார்.
அது போல் நேற்று முன்தினம் ஆனந்தன் கீழ்பரிக்கல்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு மது குடித்து விட்டு இரவு தனது சகோதரரிடம் பேசி விட்டு தூங்க செல்வதாக கூறி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆனந்தன் வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவரது மனைவி கற்பகம் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர் அருகே கீழ் பரிக்கல்பட்டு புளியஞ்சாலை தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆனந்தனுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இதையடுத்து மது பழக்கத்தை மறப்பதற்காக கற்பகம் தனது கணவரை தனது சொந்த ஊரான பண்ருட்டிக்கு அழைத்து சென்று கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது ஆனந்தன் தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அப்போது ஆனந்தன் மது குடிப்பதற்காக ஓரிரு நாள் அங்கேயே தங்கிவிட்டு அதன் பிறகு பண்ருட்டிக்கு செல்வார்.
அது போல் நேற்று முன்தினம் ஆனந்தன் கீழ்பரிக்கல்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு மது குடித்து விட்டு இரவு தனது சகோதரரிடம் பேசி விட்டு தூங்க செல்வதாக கூறி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆனந்தன் வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவரது மனைவி கற்பகம் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X