search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சாத்தூர்-ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண்கள் மாயம்

    சாத்தூர்-ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    சாத்தூர் எம்.சுப்பையா புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). ஒடிசாவைச் சேர்ந்த இவர் கோயமுத்தூரில் உள்ள மில்லில் வேலை பார்த்தபோது இவருக்கும், தேனியைச் சேர்ந்த மல்லிகாவுக்கும் (28) காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    தற்போது கணவன்- மனைவி சுப்பையாபுரத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் மல்லிகா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் இது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் மல்லிகா திடீரென மாயமானார்.

    இது குறித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் வைஷ்ணவி (19). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×