search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரே‌ஷன் அரிசி கடத்தல் வழக்கு- அரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் அதே பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

    இவரது ஆலைக்கு அழகு மூர்த்தி (40) என்பவர் சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்ணன், அழகு மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக 2 வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டிக்கு பரிந்துரைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி அரிசி ஆலை அதிபர் கண்ணன், அழகு மூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விருதுநகர் கே.கே.எஸ்.என். நகரைச் சேர்ந்தவர் முத்து பாண்டி (37). இவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து பாண்டியை கைது செய்தனர்.

    இந்த நிலையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முத்துப்பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

    அவரது உத்தரவின் பேரில் தற்போது முத்துப்பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×