என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அனுமதி
Byமாலை மலர்5 Oct 2021 11:42 AM GMT (Updated: 5 Oct 2021 4:40 PM GMT)
புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் நிலையில், அதற்கான அறிவிப்பாணையை திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் தாக்கல் செய்த மனுவில் புதுச்சேரி நகராட்சியில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் கொண்ட வார்டுகளை ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கை கொண்ட வார்டுகளை ஒதுக்கியுள்ளனர். எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளின்படி ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணையின்போது, குளறுபடிகள் நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஐந்து நாட்களில் புதிய அறிவிப்பாணையை புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X