என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து
Byமாலை மலர்2 Oct 2021 2:22 PM GMT (Updated: 2 Oct 2021 2:22 PM GMT)
குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழையபொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
குடியாத்தம்:
குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கு சொந்தமாக குடியாத்தம் டவுன் மற்றும் பாக்கம் கிராமம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பாக்கம் கிராமம் அருகே உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையின் குடோன் பல மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தேவையற்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மீண்டும் அந்த குடோனை பயன்பாட்டுக்கு கொண்டுவர மின் இணைப்பு வேண்டி நேற்று முன்தினம் வாசுதேவன் மின் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்தி உள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் குடோனுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.
மின் இணைப்பு கொடுத்த சில நிமிடங்களிலேயே குடோனில் உள்ள மின்சாதன பொருட்கள் தீப்பற்றி எரிந்து உள்ளது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக தொழிற்சாலை உரிமையாளர் வாசுதேவன், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, சுவற்றை இடித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் தீ விபத்து ஏற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை குடோனை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீப்பெட்டி தொழிற்சாலை மோர்தானா இடதுபுற கால்வாய் அருகே உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் அந்த கால்வாயில் மோட்டார் பொருத்தி தண்ணீரை பம்ப் செய்து தீயை அணைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X