என் மலர்

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தா.பழூர் அருகே கார் மோதி முதியவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தா.பழூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 61). இவர் தினக்குடி கிராமத்தில் சாலையோரத்தில் நடந்து வந்தபோது எதிரே மயிலாடுதுறை செட்டித்தெருவை சேர்ந்த ராஜகோபாலின் மகன் சரவணன் வேகமாக ஓட்டி வந்த கார் கணேசன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேசனின் மருமகன் வீரமணி கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×