search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடக்கம்

    புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    புதுச்சேரி:

    புதுவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

    மாநிலத்தில் உள்ள 1,149 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22-ந் தேதி அறிவித்தது.

    முதல் கட்டமாக காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நகராட்சிகள், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர். பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துக்களில் உள்ள 276 பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான மனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அக்டோபர் 7-ந்தேதி மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.

    அக்டோபர் 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 11-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.

    முதல் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 364 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×