search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

    வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள அக்கறைப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வீடுகளில் சோதனை நடத்தினார்.

    அப்போது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் (வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×