என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பட்டதாரி வாலிபர் படுகாயம்
புதுச்சேரி:
அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்த் நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (வயது22). இவர் பி.ஏ.பி.எட். படித்து விட்டு வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பத்துக்கு சென்றார். நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து மோகன்ராசை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மோகன்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்