என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை.
    X
    ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை.

    பண்ருட்டி அருகே சோழர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு

    பண்ருட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பமாகும்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு ஆய்வு மாணவர் குமரகுரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது சுற்றுமதில் சுவரின் வெளிபுறத்தில் கால்கள் 2-ம் மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த விஷ்ணு சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பமாகும். இப்படைப்பு சிற்பம் நின்ற நிலையில் நான்கு கரங்களில் வலதுபுற இரு கரங்கள் உடைந்த நிலையில் உள்ளது.

    மூக்கின் பகுதி சிறிது உடைந்த நிலையில், தலையில் மணிமுடி அணிந்தவாறு உள்ளார். காதுகள் இரண்டிலும் காதணியாக மகர குண்டலம், கழுத்தில் வனமாலை, வைஜெயந்தி என்கிற இருவகை மாலைகள் உள்ளன.

    இடது கைகள் இரண்டில் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறு கம்பீரமான தோற்றத்தில் உள்ளார். மார்பு பகுதி பூணூல் மற்றும் இடுப்பு நூல் அணிந்துள்ளார். இடுப்பு நூல் என்பது பூணூலிலிருந்து தனித்து நேரே உடலை ஒட்டி இடுப்பு வரை தொங்கும்.

    இடுப்பு நூல் விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோர் சிற்பங்களில் காணலாம். இடுப்பின் மேல் உதரபந்தம் என்கிற அலங்கார அணிகலன், முன்புறத்தின் நடுவே சிங்கமுகம் உள்ளது. இடுப்பு பகுதியில் ஆடையாக கீழ்பட்டாடையும் அணிய பெற்று உள்ளது.



    Next Story
    ×