search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் திருட்டு

    விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பொய்யாமணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் அவரது தாயார் செல்லம்மாள் (58) மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ந் தேதி காலை செல்லம்மாள் வீட்டை பூட்டிவிட்டு மாடு மேய்க்க சென்று விட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு உள்ள அரையின் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து செல்லம்மாள் விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×