search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    உடையார்பாளையம் அருகே கடை முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

    உடையார்பாளையம் அருகே கடை முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோட்டை வாசல் கீழ வீதியை சேர்ந்தவர் ஷேக்இப்ராகிம்(வயது 47). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், தனது மோட்டார் சைக்கிளை கடை முன் நிறுத்திருந்தார். பின்னர் இரவில் வேலை முடித்து வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளை பார்த்தபோது, அதனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஷேக்இப்ராகிம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×