என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் மும்முரம்
Byமாலை மலர்20 Sep 2021 10:47 AM GMT (Updated: 20 Sep 2021 10:47 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள கான்சாபுரம், அத்திகோவில், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக முதல் போக நெல் சாகுபடியை தற்போது விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளோம். நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
தற்போது கண்மாய்களில் நீர் குறைந்து வருவதால் சற்று வேதனையாக இருந்தாலும் கிணற்று நீரை வைத்து நடவு பணியை தொடங்கியுள்ளோம். எந்திர நடவு மற்றும் ஆட்களை கொண்டு நடவு பணியினை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள கான்சாபுரம், அத்திகோவில், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக முதல் போக நெல் சாகுபடியை தற்போது விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளோம். நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
தற்போது கண்மாய்களில் நீர் குறைந்து வருவதால் சற்று வேதனையாக இருந்தாலும் கிணற்று நீரை வைத்து நடவு பணியை தொடங்கியுள்ளோம். எந்திர நடவு மற்றும் ஆட்களை கொண்டு நடவு பணியினை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X