search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குயவர்பாளையம் லெனின் வீதியில் மசாஜ் சென்டரில் விபசாரம் - 2 இளம் பெண்கள் சிக்கினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குயவர்பாளையம் லெனின் வீதியில் மஜாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்களை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பியூட்டி பார்லர் கடந்த சில மாதங்களாக இயங்கி வந்தது. இந்த பியூட்டி பார்லரில் மசாஜ் சென்டரும் (ஸ்பா) செயல்பட்டு வந்தது.

    இந்த மசாஜ் சென்டருக்கு அடிக்கடி வெளியூர்களில் இருந்து டிப்-டாப் உடை அணிந்த ஆண்களும், பெண்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதனால் அங்கு விபசாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உருளையன் பேட்டை போலீசாருக்கும் புகார் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையில் போலீசார் ரகசியமாக அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உருளையன் பேட்டை போலீசார் மாறு வேடத்தில் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று அங்கிருந்த வரவேற்பாளர் பெண்ணிடம் இங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என கேட்டனர்.அதற்கு அந்த பெண் மஜாஜ் மற்றும் விபசாரம் நடப்பதாக கூறினார்.அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் மஜாஜ் சென்டருக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு ஒரு அறையில் ஒரு வாலிபர் இளம்பெண் ஒருவருடன் அறைகுறை ஆடையுடன் இருப்பதை போலீசார் கண்டனர்.

    உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மசாஜ் சென்டரில் வெளியூர் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது தெரிய வந்தது.

    இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் மசாஜ் சென்டரை முருங்கப்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் நடத்தி வந்ததும், இந்த மசாஜ் சென்டரில் வரவேற்பாளராக விக்கிரவாண்டி அருகே குராம்பாளையத்தை சேர்ந்த கனி என்ற கிரிஜா (29) என்பவர் இருந்து வாடிக்கையாளர்களை வரவழைத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்கள் மற்றும் வாடிக்கையாளரான கடலூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 இளம்பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் கோபால கிருஷ்ணன் மற்றும் கனி என்ற கிரிஜாவை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்திய அதன் உரிமையாளர் தினேசை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×