என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேங்காய்திட்டில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Sep 2021 10:34 AM GMT (Updated: 17 Sep 2021 10:34 AM GMT)
புதுவை தேங்காய்திட்டில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு கோமல் நகர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 26). இவர் பி.பி.ஏ. படித்து விட்டு எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் விக்னேசை விரும்பவில்லை என தெரிகிறது. எனினும் விக்னேஷ் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே விக்னேஷ் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் விக்னேஷ் விரக்தியில் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை தேங்காய்திட்டு கோமல் நகர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 26). இவர் பி.பி.ஏ. படித்து விட்டு எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் விக்னேசை விரும்பவில்லை என தெரிகிறது. எனினும் விக்னேஷ் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே விக்னேஷ் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் விக்னேஷ் விரக்தியில் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X