என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பிரபல கம்பெனியின் பெயரை பயன்படுத்தி போலி பேப்பர் கப் தயாரித்து விற்பனை- 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Sep 2021 8:42 AM GMT (Updated: 17 Sep 2021 8:42 AM GMT)
விருதுநகரில் பிரபல கம்பெனியின் பெயரை பயன்படுத்தி போலி பேப்பர் கப் தயாரித்து விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.கே.என் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 60). இவர் எளிதில் மக்கக் கூடிய வகையில் பேப்பர் கப் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 4 மாதத்தில் இவருக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது தாமோதரன் கம்பெனியின் உரிமத்தை பயன்படுத்தி போலி பேப்பர் கப் கடைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சிவகாசியை சேர்ந்த ஜனா, ஜீவா, கரீம், பெங்களூர் கிரண் ஆகிய 4 பேர் போலியாக பேப்பர் கப் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X