search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

    சசிகலாவுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    செங்கல்பட்டு,

    சசிகலாவுக்கு செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமத்தில் 49 ஏக்கர் பரப்பில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும். இந்த சொத்துகளை சசிகலா அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பேரில் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த 49 ஏக்கர்  சொத்தும் 10க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

    இதையடுத்து வருமானவரித் துறை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகளை முடக்கியுள்ளது. இன்று பையனூர் கிராமத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான 49 ஏக்கர் நிலத்தையும் வருமானவரித் துறை முடக்கியுள்ளதற்கான நோட்டீஸை ஒட்டும்.
    Next Story
    ×