search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியர் கைது

    அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அலுமினியம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரிமன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி ஆனந்த், பிரிமன்ராஜிடம் ரூ.76 ஆயிரம் மற்றும் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அருகில் உள்ள அலுமினிய கடையில் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அந்த பணத்துடன் பிரிமன்ராஜ் தலைமறைவாகி விட்டார்.

    இதுகுறித்து பெரியகடை போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிமன்ராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் அரியாங்குப்பம் வந்த பிரிமன்ராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×