என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
Byமாலை மலர்4 Sep 2021 10:49 AM GMT (Updated: 4 Sep 2021 10:49 AM GMT)
விருதுநகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக உறவுக்கார பையனை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு 17 வயதுடைய உறவுக்கார பையன் ஒருவன் சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்துள்ளார். அதற்கு காதலிக்கவில்லை என்றால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் சிறுமியும் காதலித்து வந்தார்.
இதற்கிடையில், யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் உறவுக்கார பையன் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுமியை திருமணம் செய்து தருமாறு அவரது சித்தியிடமும் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் சித்தி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாயமான உறவுக்கார பையனை தேடி வருகின்றனர்.
விருதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு 17 வயதுடைய உறவுக்கார பையன் ஒருவன் சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்துள்ளார். அதற்கு காதலிக்கவில்லை என்றால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் சிறுமியும் காதலித்து வந்தார்.
இதற்கிடையில், யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் உறவுக்கார பையன் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுமியை திருமணம் செய்து தருமாறு அவரது சித்தியிடமும் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் சித்தி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாயமான உறவுக்கார பையனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X