என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது தண்டனைக்குரியது- சிறப்பு நீதிமன்ற நீதிபதி பேச்சு
Byமாலை மலர்3 Sep 2021 12:46 PM GMT (Updated: 3 Sep 2021 12:46 PM GMT)
எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பேசினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கிசின் வழிகாட்டுதலின்பேரில், குரும்பலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்திட வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு உரிய பாதுகாப்பினை தருகிறது. எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகள் செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. வன்கொடுமைகளை எந்த வடிவில் ஏற்படுத்தினாலும், அவற்றை தடுப்பதற்கும், அதற்கான வழக்குகளை நடத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் செயல்படுகிறது. மேலும் அவர் பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வினை அடைந்து, சட்ட பாதுகாப்பினை பெற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது என்பதனை விளக்கி பேசினார்.
இதையடுத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா பேசுகையில், பொதுமக்களுக்கான சட்ட உதவியினை எளிமையாக கிடைத்திடும் வகையில் சட்ட உதவி மையம் குரும்பலூர் பேரூராட்சியில் செயல்படுகிறது. உடனடி சட்ட உதவியும், விழிப்புணர்வும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது, என்றார்.
பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி பேசுகையில், அரசின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், பயன்களை அடைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். முகாமில் குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டார். முடிவில் வக்கீல் பகுத்தறிவாளன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X