என் மலர்
செய்திகள்

விபத்து பலி
திருக்கழுக்குன்றம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலி
திருக்கழுக்குன்றம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 25). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் தாம்பரத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றம் பை-பாஸ் சாலையில் வந்தபோது எதிரே அணுபுரம் பகுதியில் சிமெண்டு ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்- இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பிச்சென்று விட்டார். லாரியை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






