என் மலர்
செய்திகள்

கைது
விருதுநகரில் காவலாளி கொலையில் வாலிபர் கைது
விருதுநகரில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சோலைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 73). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் துரைப்பாண்டி (38) என்பவரும் ஒன்றாக மது குடித்தனர்.
போதை தலைக்கேறிய நிலையில் பிச்சையின் மோட்டார் சைக்கிள் சாவி மாயமானதாக தெரிகிறது. இதனை துரைப்பாண்டி தான் எடுத்திருப்பார் என சந்தேகம் அடைந்தார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி, பிச்சையை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள சோலைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 73). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் துரைப்பாண்டி (38) என்பவரும் ஒன்றாக மது குடித்தனர்.
போதை தலைக்கேறிய நிலையில் பிச்சையின் மோட்டார் சைக்கிள் சாவி மாயமானதாக தெரிகிறது. இதனை துரைப்பாண்டி தான் எடுத்திருப்பார் என சந்தேகம் அடைந்தார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி, பிச்சையை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.
Next Story






