என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த கோவிலை காணலாம்.
    X
    கொள்ளை நடந்த கோவிலை காணலாம்.

    திட்டக்குடி அருகே அங்காளம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

    திட்டக்குடி அருகே அங்காளம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி சுப்பிரமணியன் வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் திறக்க வந்து பார்த்தபோது கோவிலின் கதவு பூட்டுகள் உடைத்து இருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த உண்டியலில் உடைத்து அதிலிருந்த இருந்த காணிக்கை அனைத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    Next Story
    ×