என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்1 Sep 2021 4:33 AM GMT (Updated: 1 Sep 2021 4:33 AM GMT)
கோவிலாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. தற்போது மழை பெய்ததில் நீர்வரத்து அதிகரித்து 27.17 அடியாக உயர்ந்தது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியார், மற்றும் கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் பெரியார் அணையின் முழு கொள்ளளவு 47.56 அடியாகும். கோவிலாறு அணையின் முழு கொள்ளளவு 42.64 அடி ஆகும்.
இந்த 2 அணைகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை முக்கிய நீராதாரமாக உள்ளது. அங்கு பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து சேருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அந்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. நேற்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 29.27 அடியாக உயர்ந்தது. கோவிலாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. தற்போது மழை பெய்ததில் நீர்வரத்து அதிகரித்து 27.17 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் 2 அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் அதை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது விவசாயிகள் நெல்நடவு செய்வதற்காக ஆயத்த பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியார், மற்றும் கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் பெரியார் அணையின் முழு கொள்ளளவு 47.56 அடியாகும். கோவிலாறு அணையின் முழு கொள்ளளவு 42.64 அடி ஆகும்.
இந்த 2 அணைகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை முக்கிய நீராதாரமாக உள்ளது. அங்கு பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து சேருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அந்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. நேற்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 29.27 அடியாக உயர்ந்தது. கோவிலாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. தற்போது மழை பெய்ததில் நீர்வரத்து அதிகரித்து 27.17 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் 2 அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் அதை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது விவசாயிகள் நெல்நடவு செய்வதற்காக ஆயத்த பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X