search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடியாத்தம் அருகே பள்ளி வளாகத்தில் ஐஸ் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

    கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஐஸ் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சின்னாலபல்லி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). ஐஸ் வியாபாரி. இவருக்கு மனைவி, 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    ராஜேந்திரன் வீட்டிற்கு அருகேயே தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இன்று அதிகாலையில் இப்பள்ளி வளாகத்தில் உள்ள புங்க மரத்தில் சேலையில் தூக்கிட்ட நிலையில் ராஜேந்திரன் இறந்த நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஐஸ் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×