என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்31 Aug 2021 6:58 AM GMT (Updated: 31 Aug 2021 6:58 AM GMT)
காயமடைந்த வியாபாரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிவகாசி:
திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மேற்குரதவீதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு நேரங்களில் கடையிலேயே படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இரவு ராஜேந்திரன் தனது கடையின் வெளியே படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (22), மாரீஸ்வரன் (18) ஆகியோர் ராஜேந்திரனிடம் பீடி கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் அவர் அருகில் இருந்த நாய் குரைத்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் அங்கிருந்த இரும்பு குழாயை எடுத்து அவரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மேற்குரதவீதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு நேரங்களில் கடையிலேயே படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இரவு ராஜேந்திரன் தனது கடையின் வெளியே படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (22), மாரீஸ்வரன் (18) ஆகியோர் ராஜேந்திரனிடம் பீடி கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் அவர் அருகில் இருந்த நாய் குரைத்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் அங்கிருந்த இரும்பு குழாயை எடுத்து அவரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X