என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கலவையில் புகையிலை, மது விற்ற 2 பேர் கைது

    கலவையில் புகையிலை, மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை:

    கலவை மேலாண்மை பேட்டை- திமிரி ரோட்டில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அகமது (வயது 36) என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் என்ற புகையிலையை விற்றுக்கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அதேபோன்று கலவையை அடுத்த கலவைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (60) என்பவர் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×