என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

    காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் பி.ஆர்.நகர் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முருகன் (வயது 30) பனப்பாக்கத்தை அடுத்த கல்பனாம்பட்டில் நடந்த திருவிழாவுக்காக பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். பனப்பாக்கம் ரோட்டில் பன்னீயூர் கூட்ரோடு பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவேரிப்பாக்கம் போலீசார், முருகனின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×