search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சிவகாசி அருகே விபத்தில் பெண் பலி

    சிவகாசி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி வெள்ளத்தாய் (வயது 45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் அரசு மருத்துவமனை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திடீரென வந்த மாடுகளால் நிலைத்தடுமாறி முத்துராஜ் மற்றும் அவரது மனைவி வெள்ளத்தாய் இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக இருவரையும் சேர்த்தனர். இதில் வெள்ளத்தாயிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×