search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்திராயிருப்பு பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்காக தயார் நிலையில் உள்ள நாற்றுகள்.
    X
    வத்திராயிருப்பு பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்காக தயார் நிலையில் உள்ள நாற்றுகள்.

    வத்திராயிருப்பு பகுதியில் முதல் போக சாகுபடிக்கு தயாராகும் நெல் நாற்றுகள்

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை அறுவடையை முடித்து விட்டு முதல்போக நெல் சாகுபடி செய்வதற்கு நாற்றாங்கால் பாவி உள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், கூமாப்பட்டி, ரஹ்மத்நகர், கிழவன்கோவில், பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நீர்நிலைகள், கண்மாய்கள், கிணறுகளில் போதுமான தண்ணீர் உள்ளது.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை அறுவடையை முடித்து விட்டு முதல்போக நெல் சாகுபடி செய்வதற்கு நாற்றாங்கால் பாவி உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே பிழைத்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளதால் மகிழ்ச்சியில் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது முதல் போக நெல் சாகுபடிக்கு தங்களது நிலத்தை தயார் செய்து வருகிறோம்.

    முதல் போக நெல் நாற்று நடவிற்கு தற்போது தாங்கள் நாற்றாங்கால் பாவி உள்ளோம். நெல் நாற்றாங்கால் பாவி 10 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளது. நெல் நாற்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.

    இன்னும் 20 முதல் 25 நாட்களில் நெல் நாற்று நடவு பணியை தொடங்க உள்ள நிலையில் இந்த நெல் நாற்றுகள் நடுவைக்கு தயாராகி வருகிறது. தற்போது உழவு பணியை தொடங்க இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×