search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உத்திரமேரூரில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு- 3 பேர் கைது

    உத்திரமேரூரில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜித் என்கிற அஜித் குமார் (வயது 26). இவர் மீது உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் 14 வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமன் (33) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அஜித் குமார் எம்.ஜி.ஆர். நகர் ரேஷன் கடை அருகே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அரிவாளுடன் வந்த ராமன் அவரை சரமாரியாக தலை, முதுகு, கழுத்து போன்ற பகுதிகளில் வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்த அஜித் குமாரை சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித் குமாரின் தாயார் முனியம்மாள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து ராமன், அவரது மனைவி சுமதி(26), தாயார் சந்திரா(70) ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×