என் மலர்
செய்திகள்

கைது
நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 3 பேர் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், நெட்டப்பாக்கம் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்ற பிரகாஷ் (வயது 24), ஏரிப்பாக்கம் புதுகாலனி விஜயபிரபாகரன் (25), ராமரெட்டிகுளம் சிவா (24) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






