என் மலர்
செய்திகள்

கைதான ராஜாவின் கன்னத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அறைந்த காட்சி.
பாலியல் புகாரில் கைதானவர் மேலும் பல பெண்களை சீரழித்தாரா?- போலீசார் விசாரணை
ஆதரவற்ற இளம்பெண்களையும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களையும் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளி பலரது வாழ்க்கையை சீரழித்திருப்பதாக தஞ்சையை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் பகுதியில் மேலாடையின்றி நிற்கும் வாலிபரை சில பெண்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அடி வாங்கும் வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதன் (வயது 34) என தெரியவந்தது.
அவர் ஏன் தாக்கப்பட்டார்? என விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
திருச்சியில் “கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்” என்ற பெயரில் ராஜா ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு ஏற்பாட்டிற்கு பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் சில பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார். அவர் சில பெண்களிடம் அவர்களுக்கு தெரியாமல் மது அருந்த செய்ததாகவும், பின்னர் வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில பெண்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராஜாவுக்கு போலீஸ் ஏட்டு ஒருவர் துணை இருந்ததாகவும் அதன் மூலம் தான் மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிளஸ்-1 படித்து விட்டு சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறேன். திருச்சியைச் சேர்ந்த சில பெண்கள் மூலம் அறந்தாங்கி ராஜா பழக்கம் ஆனார்.
அவர் பல்வேறு விசேஷ சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பாளர்கள் மற்றும் நடனம் ஆடுவதற்கு பெண்களுக்கு வேலை கொடுத்து வந்தார். இதனால் எங்களது செல்போன் நம்பர்களை வாங்கி வைத்திருந்தார்.
ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது இரவு நேரமாகி விட்டதால் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தனர். என்னுடன் 2 பெண்கள் ஒரே அறையில் தங்கி இருந்தோம். வேறுஅறையில் 2 பெண்கள் இருந்தனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அந்த 2 பெண்களும், ராஜா மற்றும் அவரது நண்பர் போலீஸ் ஏட்டுவும் ஒரே அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ராஜா என்னிடம் நீங்கள் அனுசரித்து போனால் பணம், நகை கிடைக்கும் என்றார்.
மேலும் அவர்களுடன் அந்த பெண்கள் அனுசரித்து சென்றதால் 2 பவுன் தங்க சங்கிலியை போலீஸ் ஏட்டு கொடுத்ததாகவும், பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் ராஜா தெரிவித்தார். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 மாதம் தங்கி இருந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். குடும்ப கஷ்டம் தீரும். சொகுசாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறினார். ஆனால் நான் உள்பட என்னுடன் இருந்த பெண்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் எங்களிடம் தகாத முறையில் பேசிய ராஜா செல்போனிலும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் பயந்துபோன நாங்கள் இனிமேல் தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்வோம் என எச்சரித்தோம்.
ஆதரவற்ற இளம்பெண்களையும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களையும் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளி பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளான்.
நாங்கள் அவனது திட்டத்துக்கு பணியாததால் என்னுடன் இருந்த பெண்ணுக்கு போலீஸ் ஏட்டு மூலம் மிரட்டல் விடுத்தார். கடந்த ஏப்ரல் 7-ந்தேதி அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தின் ஏட்டு (ராஜாவின் நண்பர்) பேசுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளது. விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மிரட்டி உள்ளார்.
அப்போது போலீஸ் நிலையம் வரவேண்டாம் நான் சொல்லும் இடத்துக்கு வரவேண்டும் என்று தகாத முறையில் பேசி உள்ளார். ராஜா சொல்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆட்களை வைத்து ராஜாவை கடத்தி மிரட்டியதாக எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளி விடுவேன். மேலும் பாலியல் தொழில் செய்வதாக கூறி பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் மிரட்டி உள்ளார்.
எனவே பாலியல் தொழிலில் பெண்களை தள்ளும் ராஜா, அவருக்கு ஆதரவாக சட்டவிரோதமாக செயல்படும் போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் ஆதரவற்ற பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தி உள்ளனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தால் பல பெண்களை சீரழித்தது தெரியவரும். மேலும் பல ஆதரவற்ற இளம்பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் முடிவில்தான் ராஜாவால் பல பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவரும்.
இவர் முதலில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். அதன் பிறகுதான் ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு வேலை கொடுப்பதாக கூறி இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதான ராஜாவுக்கு போலீஸ் ஏட்டு உடந்தையாக இருந்தாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தான் ராஜாவை தனியாக வரவழைத்து தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் சில பெண்கள் கோபமாக பேசுவது தெளிவாக தெரிகிறது. ராஜாவை தாக்கும் அந்த பெண்கள், நான் நல்லாதானே இருந்தேன். என்னை ஏன் இப்படி செய்தாய்? என்னை ஏன் தப்பாக வீடியோ எடுத்தாய்? என கேட்டு கதறி அழுகின்றனர்.
பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளியதன் மூலம் ராஜா மற்றும் போலீஸ் ஏட்டு பல லட்சங்களை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் பகுதியில் மேலாடையின்றி நிற்கும் வாலிபரை சில பெண்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அடி வாங்கும் வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதன் (வயது 34) என தெரியவந்தது.
அவர் ஏன் தாக்கப்பட்டார்? என விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
திருச்சியில் “கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்” என்ற பெயரில் ராஜா ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு ஏற்பாட்டிற்கு பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் சில பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார். அவர் சில பெண்களிடம் அவர்களுக்கு தெரியாமல் மது அருந்த செய்ததாகவும், பின்னர் வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில பெண்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராஜாவுக்கு போலீஸ் ஏட்டு ஒருவர் துணை இருந்ததாகவும் அதன் மூலம் தான் மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிளஸ்-1 படித்து விட்டு சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறேன். திருச்சியைச் சேர்ந்த சில பெண்கள் மூலம் அறந்தாங்கி ராஜா பழக்கம் ஆனார்.
அவர் பல்வேறு விசேஷ சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பாளர்கள் மற்றும் நடனம் ஆடுவதற்கு பெண்களுக்கு வேலை கொடுத்து வந்தார். இதனால் எங்களது செல்போன் நம்பர்களை வாங்கி வைத்திருந்தார்.
ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது இரவு நேரமாகி விட்டதால் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தனர். என்னுடன் 2 பெண்கள் ஒரே அறையில் தங்கி இருந்தோம். வேறுஅறையில் 2 பெண்கள் இருந்தனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அந்த 2 பெண்களும், ராஜா மற்றும் அவரது நண்பர் போலீஸ் ஏட்டுவும் ஒரே அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ராஜா என்னிடம் நீங்கள் அனுசரித்து போனால் பணம், நகை கிடைக்கும் என்றார்.
மேலும் அவர்களுடன் அந்த பெண்கள் அனுசரித்து சென்றதால் 2 பவுன் தங்க சங்கிலியை போலீஸ் ஏட்டு கொடுத்ததாகவும், பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் ராஜா தெரிவித்தார். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 மாதம் தங்கி இருந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். குடும்ப கஷ்டம் தீரும். சொகுசாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறினார். ஆனால் நான் உள்பட என்னுடன் இருந்த பெண்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் எங்களிடம் தகாத முறையில் பேசிய ராஜா செல்போனிலும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் பயந்துபோன நாங்கள் இனிமேல் தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்வோம் என எச்சரித்தோம்.
ஆதரவற்ற இளம்பெண்களையும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களையும் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளி பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளான்.
நாங்கள் அவனது திட்டத்துக்கு பணியாததால் என்னுடன் இருந்த பெண்ணுக்கு போலீஸ் ஏட்டு மூலம் மிரட்டல் விடுத்தார். கடந்த ஏப்ரல் 7-ந்தேதி அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தின் ஏட்டு (ராஜாவின் நண்பர்) பேசுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளது. விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மிரட்டி உள்ளார்.
அப்போது போலீஸ் நிலையம் வரவேண்டாம் நான் சொல்லும் இடத்துக்கு வரவேண்டும் என்று தகாத முறையில் பேசி உள்ளார். ராஜா சொல்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆட்களை வைத்து ராஜாவை கடத்தி மிரட்டியதாக எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளி விடுவேன். மேலும் பாலியல் தொழில் செய்வதாக கூறி பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் மிரட்டி உள்ளார்.
எனவே பாலியல் தொழிலில் பெண்களை தள்ளும் ராஜா, அவருக்கு ஆதரவாக சட்டவிரோதமாக செயல்படும் போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் ஆதரவற்ற பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தி உள்ளனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தால் பல பெண்களை சீரழித்தது தெரியவரும். மேலும் பல ஆதரவற்ற இளம்பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் முடிவில்தான் ராஜாவால் பல பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவரும்.
இவர் முதலில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். அதன் பிறகுதான் ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு வேலை கொடுப்பதாக கூறி இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதான ராஜாவுக்கு போலீஸ் ஏட்டு உடந்தையாக இருந்தாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தான் ராஜாவை தனியாக வரவழைத்து தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் சில பெண்கள் கோபமாக பேசுவது தெளிவாக தெரிகிறது. ராஜாவை தாக்கும் அந்த பெண்கள், நான் நல்லாதானே இருந்தேன். என்னை ஏன் இப்படி செய்தாய்? என்னை ஏன் தப்பாக வீடியோ எடுத்தாய்? என கேட்டு கதறி அழுகின்றனர்.
பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளியதன் மூலம் ராஜா மற்றும் போலீஸ் ஏட்டு பல லட்சங்களை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
Next Story






